தோனி, தன் வாழ்க்கை வரலாற்று படத்தை ப்ரோமோட் பண்ண சென்னை வந்தார். ஜோதிகா, தன் பிள்ளைகளுடன் கெஸ்ட்டாக கலந்துகொள்ள, டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க… ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தோனி… மேடையில் ரஜினி ஸ்டைல் காட்டி, அவரின் ‘என் வழி தனி வழி” வசனம் பேசி மகிழ்ச்சியால் ஒட்டு மொத்த அரங்கத்தையும் அதிரவைத்தார். அதன் பின் , சூர்யாவின் பிள்ளைகளுடன் மேடையில் பேசினார். “நான் சிங்கம் படம் பார்த்தேன். உங்க அப்பாவோட ரசிகர் நான்.” என்றார். “பள்ளி படிக்கும் போது, எப்படி இருப்பீர்கள்? ” என்று சூர்யா பெண் கேட்க, “குறும்பு தான், ஆனால், ரூல்ஸ் பாலோ பண்ணுவேன்” என்றார். உடனே, சூர்யா மகன் தேவ்…”நானும் குறும்பு” என்று வெட்கப்பட…
ஜோ, கீழே அமர்ந்து…அத்தனையையும் ரசித்தார்.
|